http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 111

இதழ் 111
[ செப்டம்பர் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

கதவுகள்
தேவூர்
கோமுகம்
Arivar Koil - 1
தென்னவன் தோள்துஞ்சிய வேப்பம்பூமாலையே!
இதழ் எண். 111 > இலக்கியச் சுவை
தென்னவன் தோள்துஞ்சிய வேப்பம்பூமாலையே!
ரிஷியா
தமிழ்மகளின் வீரக்காவலன் அவன். வைகையின் காவலனும் அவனே! சங்கம் வைத்துத் தமிழ் மகளைப் போற்றி வளர்த்தவன் அவனே! பாண்டியன், வழுதி, செழியன், தென்னவன் எனத் தமிழ்ப் பாக்கள் பல பெயர் கொண்டு அவன் பெருமை பாடும்.



அவனின் தோள் மாலையாக விளங்கியது வேப்பம்பூ மாலை. அவ்வெண்ணிறப் பூக்கள் ஒளிசிந்தும் அழகிய அம்மாலை அவன் வெற்றிச் சிறப்பைப் பேசியது. அதற்கான நற்சான்றுகள் பல நம் சங்க இலக்கியச் சோலையில் உள்ளன.

இடைக்குன்றூர் கிழார் பாண்டியன் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இவ்வாறு பாடுகிறார்.

'மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிழைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு வொலியச் சூடி' (புறம்; 76;4-7)

வேப்பம் பூந்தளிருடன் நெடிய உழிழைக் கொடியைக் கலந்து செறிவாகக் சூடி தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் தன்னை எதிர்த்த எழுவரை வென்றான் என்பதே இப்பாடல் தரும் விளக்கம்.

மருதக் கலி காட்டும் எழிலார்ந்த காட்சி ஒன்று. மகளிர் கூட்டம் ஒரு பூங்கொடியை வளைத்துப் பூப்பறித்தனர். அப்பூங்கொத்துக்களில் இருந்த வண்டுக் கூட்டம் வேப்பமாலை அணிந்த பொதிய மலைத் தலைவனான (பொருப்பன்) பாண்டியனின் பகைக்கூட்டம் போலச் சிதறி ஓடியது.

'பூங்கொடி வாங்கி இணர்கொய்ய ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனை அரண் போல உடைந்தன்று அக் காவின்
துனை வரி வண்டின் இனம்' (மருதக்கலி; 27; 21-24)

வீரச் சமர்களக் காட்சி ஒன்றி நம் கண்முன்னே விரிகிறது நெடுநெல் வாடையின் வரிகள் வழியே.

அது ஒரு கூதிர்காலம். சமர்களத்துப் பாசறையைத் தலையில் கட்டிய வேல் ஏந்திச் செல்லும் படைத்தலைவன் முறைப்படி அம்மறவர்களை மன்ன்னுக்குக் காட்டி அவர்களைப் பற்றிக் கூறி வந்தான். அப்பாடல் இது.

'வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்ட..' (நெடுநெல்வாடை-176-177)

கருங்கால் வேம்பின் ஒண்பூக்களைச் சூடும் மரபு அந்நாளில் பாண்டிய நட்டில் பெருவழக்காக மக்களின் வாழ்வியலில் இணைந்திருக்கின்றது.

இன்று வேப்பம்பூக்களைச் சூடும் பழக்கம் வழக்கொழிந்து விட்டது. என்றாலும் வேப்ப மரங்களின் பூக்களைக் காணும்போதெல்லாம் ஒரு வீர யுகத்தின் வெற்றிச் சிறப்பு பேசும் வரலாறு தவிர்க்க முடியாமல் கண்முன்னர் நிழலாடுகிறது.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.